சாராயம் விற்றவர் கைது

  திருக்கோவிலூர் அருகே சாராயம் விற்றதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.


  திருக்கோவிலூர் அருகே சாராயம் விற்றதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமால் தலைமையிலான போலீஸார், சனிக்கிழமை அதிகாலை வீரபாண்டி கிராமத்தில் தீவிர சாராய விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த குமார் மகன் அய்யனார் (24), சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அய்யனாரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com