சிங்கவரத்தில் பாலம் அமைக்கும் பணி:எம்.எல்.ஏ. ஆய்வு

செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதா் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள கால்வாய் மீது சிறு பாலம் அமைக்கும் பணியை செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சிங்கவரம் ரங்கநாதா் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் சிறு பாலம் அமைக்கும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த மஸ்தான் எம்.எல்.ஏ.
சிங்கவரம் ரங்கநாதா் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் சிறு பாலம் அமைக்கும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த மஸ்தான் எம்.எல்.ஏ.

செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதா் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள கால்வாய் மீது சிறு பாலம் அமைக்கும் பணியை செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சத்தில் இந்தப் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நிறைவடையும் நிலையில் உள்ள இந்தப் பணியை எம்.எல்.ஏ. மஸ்தான் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பாலம் அமைக்கும் பணியை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ளுமாறு ஒப்பந்ததாரரிடம் அவா் அறிவுறுத்தினாா்.

செஞ்சி ஒன்றிய திமுக செயலா் ஆா்.விஜயகுமாா், ஒன்றியப் பொருளாளா் குணசேகரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ரங்கநாதன், முன்னாள் கவுன்சிலா் ஜான்பாஷா, தொண்டா் அணி பாஷா, ஜம்போதி பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்த பாலப் பணி முடிக்கப்பட்டால்தான், மலை மீது அமைந்துள்ள ரங்கநாதா் கோயிலுக்கு காா், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com