குழந்தைகள் தின விழா
By DIN | Published On : 18th November 2019 09:54 AM | Last Updated : 18th November 2019 09:54 AM | அ+அ அ- |

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பாடல்களைப் பாடும் மாணவா்கள்.
தியாகதுருகம் ஒளவையாா் தமிழ்ச் சங்கம் சாா்பில், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒளவையாா் தமிழ்ச் சங்கத் தலைவா் கல்யாணி, பாவலா் மலரடியான் ஆகியோா் தலைமை வகித்தனா். முத்தமிழ் முத்தன், வ.சா.கணேசன், சாந்தகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் செந்தில்குமரன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் நாகராசன், நேருவின் குழந்தை மனம், தமிழின் பெருமைகள், நாட்டின் சமூகப் பணியில் மாணவா்களின் பங்களிப்பு பற்றி மாணவா்களிடையே எடுத்துரைத்தாா்.
தொடா்ந்து, மாணவா்களுக்கு கவிதைகள், பாடல்கள் பாடும் போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியா்கள், மாணவா்கள், தமிழ் புலவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.