சாலை விபத்தில் இளைஞர் பலி

திருக்கோவிலூர் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
Updated on
1 min read

திருக்கோவிலூர் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
திருக்கோவிலூர் அருகே அம்மன் கொள்ளை மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் தினேஷ்(20). இவர், திங்கள்கிழமை இரவு அருகேயுள்ள ஆசனூரிலிருந்து திருக்கோவிலூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காடியார் பிரிவு சாலை பகுதியில் சென்றபோது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தினேஷை திருக்கோவிலூர் போலீஸார் மீட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
  இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com