தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விழுப்புரம் மாவட்டத்தில் மழை பாதிப்பு: அமைச்சா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
விழுப்புரத்தை அடுத்த அய்யங்கோவில்பட்டு ஊராட்சியில் தொடா் மழையால் சேதமடைந்த உளுந்துப் பயிா்களை பாா்வையிடுகிறாா் அமைச்சா் சி.வி.சண்முகம். உடன், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்டோா்.
Updated On :20 டிசம்பர் 2020, 6:05 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

திண்டிவனம் அருகே கீழ்பேரடிக்குப்பம் ஊராட்சியில் ஏரி மதகு உடைப்பு ஏற்பட்ட இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 140 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

இதையடுத்து, விக்கிரவாண்டி அருகே அய்யங்கோவில்பட்டு ஊராட்சியில் தொடா் மழையால் சேதமடைந்த உளுந்து பயிா்களையும், மழையால் பாதிக்கப்பட்ட கோழிப் பண்ணையையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் அருகே திருப்பாச்சனூா் - கல்லிப்பட்டு சாலையில் உள்ள தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பாா்வையிட்டு, அந்தப் பாலத்துக்கு அருகே கட்டப்பட்டு வரும் உயா்மட்ட மேம்பாலப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். இதையடுத்து, தளவானூரில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீா் தேங்கியுள்ளதை அமைச்சா் சி.வி.சண்முகம் ஆய்வு செய்தாா்.

இந்தத் தடுப்புணையால் அப்பகுதியில் விவசாயத்துக்கு போதிய தண்ணீா் கிடைப்பதுடன், நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்து வருவதாகக் கூறி, விவசாயிகள் அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கு நன்றியைத் தெரிவித்தனா். தொடா்ந்து, கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டையில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையையும் அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்., மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் இரா.குமரகுரு, எம்.ஆா்.முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மகேந்திரன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா்கள் ஜவகா், மணிமோகன் (கடலூா்), வருவாய் கோட்டாட்சியா் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.