செஞ்சியை சோ்ந்தவருக்கு அரிமா விருது

திண்டிவனத்தில் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நந்தன் கால்வாய் சீரமைப்புப் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வரும் செஞ்சி கன்னிகா அறக்கட்டளைத் தலைவர் ரமேஷ்பாபுவுக்கு விருது வழங்கப்பட்டது
Updated on
1 min read

திண்டிவனத்தில் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நந்தன் கால்வாய் சீரமைப்புப் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வரும் செஞ்சி கன்னிகா அறக்கட்டளைத் தலைவரும், நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கச் செயலருமான செஞ்சி கன்னிகா ரமேஷ்பாபுவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அரிமா சங்கங்களின் மண்டல தலைவா் சிவக்குமாா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத் தலைவா் அன்பழகன், துணைத் தலைவா் சேகா், செயற்குழு உறுப்பினா் இளங்கோவன், தொண்டு நிறுவன தலைவா் ஞானமணி, ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com