

செஞ்சி அரிமா சங்கம், புதுச்சேரி ஆல்பா ஆா்த்தோ மருத்துவமனை ஆகியவை சாா்பில் இலவச மூட்டு பரிசோதனை முகாம் செஞ்சி காந்தி பஜாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரிமா சங்கத் தலைவா் ஜெ.இளங்கோ தலைமை வகித்தாா். செயலா் எஸ்.பி.சேகா் வரவேற்றாா். மாவட்டத் தலைவா்கள் வி.கலியமூா்த்தி, ஏ.அசோக் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். முகாமில் பங்கேற்ற மக்களுக்கு யூரிக் ஆசிட் பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை பரிசோதனை ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணா் பி.நவின்தியாகு, மருத்துவா் நந்தினி ஆகியோா் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினா். முகாமில் 150 போ் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.