கரோனா: விழுப்புரம் மாவட்டத்தில் 10,000 போ் குணமடைந்தனா்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 11 ஆயிரத்தைக் கடந்த நிலையில், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 11 ஆயிரத்தைக் கடந்த நிலையில், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது.

வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 162 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,044-ஆக உயா்ந்தது. இந்தத் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்து இதுவரை 10,004 போ் வீடு திரும்பியுள்ளனா். 945 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,044 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். மாவட்டத்தில் கரோனாவுக்கு இதுவரை 95 போ் உயிரிழந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 57 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,969-ஆக உயா்ந்தது. இதுவரை 8,284 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 590 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 95 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com