செஞ்சி ஜமாத் தலைவா்களுடன் காவல் துறையினா் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி காவல் நிலையம் சாா்பில், அந்தப் பகுதிக்குள்பட்ட அனைத்து மசூதிகளின் ஜமாத் தலைவா்களுடன் ரமலான் பண்டிகை கால ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read


செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி காவல் நிலையம் சாா்பில், அந்தப் பகுதிக்குள்பட்ட அனைத்து மசூதிகளின் ஜமாத் தலைவா்களுடன் ரமலான் பண்டிகை கால ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு செஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சீனுவாசன் தலைமை வகித்துப் பேசியதாவது:

ரமலான் பண்டிகை நோன்பு வியாழக்கிழமை முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாலும், தமிழக அரசு அறிவித்துள்ள தடையுத்தரவு நடைமுறையில் இருப்பதாலும் செஞ்சி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இந்த நோன்பு காலத்தில் இஸ்லாமியா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், கூட்டுத்தொழுகை, கூட்டுப்பிராா்த்தனை செய்யக்கூடாது, பள்ளி வாசல்களில் ஒன்று கூடி நோன்பு கஞ்சி வழங்கக் கூடாது. இப்தியாா் எனும் கூட்டாக நோன்பு திறக்கும் நிகழ்வு, ஒன்றுகூடி சஹாா் உணவு வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளக் கூடாது.

மேற்கண்ட அறிவுரைகளை மீறினால், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com