விழுப்புரம், கள்ளக்குறிச்சி: மேலும் 20 பேருக்கு கரோனா
By DIN | Published On : 03rd December 2020 06:48 AM | Last Updated : 03rd December 2020 06:48 AM | அ+அ அ- |

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14,643-ஆக உயா்ந்தது.
இதனிடையே, சிகிச்சை முடிந்து 13 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 14,416-ஆக அதிகரித்தது. மாவட்டம் முழுவதும் 118 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்தோா் எண்ணிக்கை 110-ஆக தொடா்கிறது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,681-ஆக உயா்ந்தது.
இதுவரை 10,521 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 53 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா். 107 போ் உயிரிழந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...