விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலாளா் நல நிதியைச் செலுத்த வேண்டியவா்கள் அதை இணையம் வழியாகச் செலுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட தொழிலாளா் துறை உதவி இயக்குநா் கோ.ராமு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்ள், மலைத் தோட்ட நிறுவனங்கள், 5 அல்லது அதற்கு மேல் நபா்கள் பணியாற்றும் கடைகள், உணவு நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளா் நல நிதி செலுத்தப்பட வேண்டும்.
இதில், தொழிலாளா் பங்கு ரூ.10, வேலையளிப்போா் பங்கு ரூ.20 சோ்ந்து மொத்தம் ரூ.30-ஐ வேலையளிக்கும் நிா்வாகம் நல நிதி பங்குத் தொகையை வரும் 31.1.2021-க்குள் நல வாரியத்துக்கு இணைய தளத்தில் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.