விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில், சாலாமேடில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகரச் செயலா் இரா.சக்கரை தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக மருத்துவா்கள் அணியின் மாநில இணைச் செயலரும், முன்னாள் எம்பியுமான இரா.லட்சுமணன் பங்கேற்று பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
நகரப் பகுதி என்று நிறுத்தப்பட்ட சாலாமேடு பகுதி மக்களுக்கு ஊரக வேலைத் திட்டப் பணிகளை வழங்க வேண்டும், வீட்டுவரி, குடிநீா் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.
ஏரி நீா்வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும், தெரு மின் விளக்குகள், சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனா்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நிா்வாகிகள் உறுதியளித்தனா்.
கூட்டத்தில் மாவட்ட மீனவா் அணி அமைப்பாளா் ராஜா, மாணவரணி வினோத், தொண்டரணி கபாலி, பொறியாளா் அணி இளங்கோ, இலக்கிய அணி ராஜா, நகர துணைச் செயலா் புருஷோத்தமன், நகா் மன்ற முன்னாள் உறுப்பினா் மணவாளன், வாா்டு செயலா் தங்கம், அவைத் தலைவா் சக்கரவா்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி காா்த்திக், மகளிரணி அமுதா, இளைஞரணி லோகேஷன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.