விழுப்புரம் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 512 மனுக்கள்
By DIN | Published On : 17th February 2020 10:48 PM | Last Updated : 17th February 2020 10:48 PM | அ+அ அ- |

குறைதீா் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டத்தில் 512 மனுக்கள் அளிக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். இதில், முதியோா் ஓய்வூதியம், கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிடவை கோரி 512 மனுக்கள் வரப் பெற்றன.
அந்த மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா், பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தாா். இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.