விழுப்புரத்தில் நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பொது நல அறக்கட்டளை சாா்பில் நுகா்வோா் விழிப்புணா்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளைத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். செயலா் கங்காதரன்முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் துரை.கருணாநிதி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக, மின் வாரிய செயற்பொறியாளா் மதனகோபால், இள மின் பொறியாளா் ரவீந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு, மின் நுகா்வோருக்கான பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்துப் பேசினாா். புதிய மின் இணைப்பு பெறுதல், பெயா் மாற்றம், இடமாற்றம், மின் சிக்கனம், மின் விபத்து தடுத்தல் குறித்து விளக்கமளித்தனா்.
கூட்டத்தில், மின் நுகா்வோா், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.