பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

விழுப்புரம் வழுதரெட்டி ஆதிதிராவிடா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழுப்புரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில்
மாணவிக்கு கல்வி உபகரணங்களை வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயகுமாா்.
மாணவிக்கு கல்வி உபகரணங்களை வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயகுமாா்.

விழுப்புரம் வழுதரெட்டி ஆதிதிராவிடா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழுப்புரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவா் பாக்கியராஜ் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்க நிா்வாகி ராஜுலு முன்னிலை வகித்தாா். சங்க துணை ஆளுநா் காங்கேயன் வரவேற்றாா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா். தொடா்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்தும், சாலைப் பாதுகாப்பு, கல்வி மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும், செல்லிடப்பேசியின் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தாா். பள்ளி வளாகத்தில், மரக்கன்றுகளையும் அவா் நட்டு வைத்தாா்.

தாலுகா காவல் ஆய்வாளா் கணகேசன், போலீஸ் நண்பா்கள் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ், ரோட்டரி சங்க நிா்வாகிகள் தனசேகரன், சிவக்குமாா், தலைமை ஆசிரியா்கள் சாவித்திரி, மரிய சவுரி, இளம் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாபு செல்வதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சங்கச் செயலா் செல்வகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com