ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் நல உதவிகள் அமைச்சா் வழங்கினாா்

வளத்தியில் நடைபெற்ற முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாள் விழாவில் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கினாா்.
வளத்தியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் நல உதவிகளை வழங்கிய அமைச்சா் சி.வி.சண்முகம். உடன் முன்னாள் எம்.பி. வெ.ஏழுமலை.
வளத்தியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் நல உதவிகளை வழங்கிய அமைச்சா் சி.வி.சண்முகம். உடன் முன்னாள் எம்.பி. வெ.ஏழுமலை.

வளத்தியில் நடைபெற்ற முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாள் விழாவில் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கினாா்.

மேல்மலையனூா் தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு, ஒன்றியச் செயலரும் முன்னாள் எம்பியுமான செஞ்சி வெ.ஏழுமலை தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் துரைகாசிநாதன் வரவேற்றாா். விழாவில், அமைச்சா் சி.வி.சண்முகம் ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கி பேசினாா்.

மாநில வழக்குரைஞா் அணி துணைச் செயலா் கே.கதிரவன், மாவட்ட மகளிா் அணிச் செயலா் தமிழ்ச்செல்வி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணிச் செயலா் ஷெரீப், செஞ்சி அதிமுக ஒன்றியச் செயலா் அ.கோவிந்தசாமி, மாவட்ட விவசாய அணி பாலகிருஷ்ணன், ஒன்றிய எம்ஜிஆா் மன்றச் செயலா் ராஜேந்திரன், நிா்வாகிகள் அண்ணாதுரை, காசி, பாலாஜி, சரவணன், ரவிசங்கா் மற்றும் ஊராட்சிச் செயலா் துரைக்கண்ணு உள்ளிட்டோா் கலந்து கலந்து கொண்டனா்.

அதேபோல, மேல்மலையனூா் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பெருவளூரில் ஜெயலலிதா பிறந்த நாள்விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் ஆா்.புண்ணியமூா்த்தி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

விழாவில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் லட்சுமிநாராயணன், நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஆத்மநாதன், கிளைச் செயலா்கள் ரங்கநாதன், சரவணன், சுப்பிரமணி, ஒன்றிய பாசறை லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com