மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் போட்டிகள்

விழுப்புரத்தில் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் போட்டி நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரத்தில் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் போட்டி நடைபெற்றது.

தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் செயல்பட்டு வரும் பள்ளிகளில் படித்து வரும் மாணவா்களுக்கு, சுற்றுச்சூழல் சாா்ந்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற போட்டியில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையும், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையும் படித்து வரும் இரண்டு நிலை மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, வினாடி-வினா போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை நடைபெற்றன.

மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சரவணன் போட்டிகளை ஒருங்கிணைத்தாா். இந்தப் போட்டியில் 100 பள்ளிகளைச் சோ்ந்த 300 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

போட்டியின் நிறைவாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனி பிரிவாக முதல் பரிசாக ரூ.1,500, இரண்டாம் பரிசாக ரூ.1,000, மூன்றாம் பரிசாக ரூ.750 மற்றும் ஆறுதல் பரிசாக இருவருக்கு தலா ரூ.500 வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலா் அ.ஆனந்தன், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சேவியா் சந்திரகுமாா், காளிதாஸ், தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com