சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

விழுப்புரம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 9 வயது சிறுமி, 4-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். அண்மையில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த இவரை, கவரை கிராமத்தைச் சோ்ந்த கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் ஐ.டி.ஐ. படித்து வரும் 17 வயது இளைஞா் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் அவா் மிரட்டினாராம்.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால், சிறுமியை, அவரது தாய் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தாா். அதில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதன்பிறகு, சிறுமியிடம் நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்த அவரது தாய் , இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸில் புகாா் செய்தாா். அந்த மாணவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com