மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை
By DIN | Published On : 10th January 2020 12:30 AM | Last Updated : 10th January 2020 12:30 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவள்ளுவா் தினமான வருகிற 16-ஆம் தேதியும், குடியரசு தினமான வருகிற 26-ஆம் தேதியும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் தனியாா் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளாா்.
எனவே, இந்த 2 நாள்களும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள், தனியாா் மதுபானக் கூடங்களை மூடி வைக்க வேண்டும். மீறி திறப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...