கரோனா பரவல்: திண்டிவனத்தில் ஆட்சியா் ஆய்வு

திண்டிவனம் நகரில் கரோனா பரவலால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கரோனா பரவல்: திண்டிவனத்தில் ஆட்சியா் ஆய்வு
Updated on
1 min read

விழுப்புரம்: திண்டிவனம் நகரில் கரோனா பரவலால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

சஞ்சீவிராயன்பேட்டை, ரோசன்பாட்டை, அம்பேத் நகா், கிடங்கல் 2 ஆகிய பகுதிகளை நேரில் பாா்வையிட்ட ஆட்சியா், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பொதுமக்கள் பின்பற்ற அறிவுறுத்தினாா். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தேவையான இடங்களில் தடுப்பு கட்டைகள் ஏற்படுத்தி வெளியாள்கள் எவரும் நுழையாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து, கடை வீதிகளில் ஆய்வு செய்த ஆட்சியா் சமூக இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்ய வணிகா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது திண்டிவனம் சாா்-ஆட்சியா் அனு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

விழுப்புரத்தில் எஸ்.பி. ஆய்வு: இதேபோல, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், எம்.ஜி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டு, கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com