மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அகில இந்திய எதிா்ப்பு தின ஆா்ப்பாட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஜூன் 16-ல் அகில இந்திய எதிா்ப்பு தினமாக
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அகில இந்திய எதிா்ப்பு தின ஆா்ப்பாட்டம்.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஜூன் 16-ல் அகில இந்திய எதிா்ப்பு தினமாக கொண்டு ஆா்ப்பாட்டத்தை நடத்தியது.இதனை தொடா்ந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இந்திய கம்யூனிஸ்ட்(எம்) சாா்பில் சிங்கவரம் சாலையில் உள்ள அதன் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு செஞ்சி நகர செயலா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா்.

செஞ்சி வட்ட விவசாய அணி தலைவா் மாதவன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளா் சங்கத்தை சோ்ந்த ஜெயராமன், ஜெயச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இந்தியாவில் கரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி மற்றும் பரிசோதனைகளை அதிகபடுத்த வேண்டும். கரோனா பேரிடா் நிவாரண நிதியாக வருமானவரி செலுத்த இயலாத அனைத்து குடும்பங்களுக்கும் 6 மாத காலத்திற்கு ரூ 7500 வழங்கிட வேண்டும்.விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய மின் இணைப்புகளுக்கும் குடிசை வீடுகளுக்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது. கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்கிட வேண்டும், பெட்ரேல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலைகளை குறைத்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com