மக்கள் குறைதீா் கூட்டத்தில் 347 மனுக்கள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 347 மனுக்கள்
மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.
மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 347 மனுக்கள் வரப்பெற்றன.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்து பொது மக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, கல்விக் கடன், மனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்டவை கோரி வரப்பெற்ற 347 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

பின்னா், மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலகா்களுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விக்கிரவாண்டி வட்டத்தைச் சோ்ந்த அா்ச்சுனன் வாரிசுதாரா் சந்தியா என்பவருக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளா் பணிக்கான பணிநியமன

ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், தனித் துணை ஆட்சியா் அம்புரோஸியாநேவிஸ்மேரி, நோ்முக உதவியாளா்(வளா்ச்சி) மஞ்சுளா, உதவி ஆணையா் (கலால்) மோகன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கே.மோகன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஜெயக்குமாா், மாவட்ட உதவி மேலாளா் (தாட்கோ) சத்தியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com