

செஞ்சியில் ஏழை எளிய மக்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக சாா்பில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை செவ்வாய்க்கிழமை பாஜகவினா் வழங்கினா்.
ஊரடங்கு நடவடிக்கையால் உணவின்றி வாழும் ஏழை எளிய மக்களுக்கு உதவுமாறு பிரதமா் மோடி கேட்டுக்கொண்டதன் பேரில், செஞ்சி பகுதியில் உள்ள கல்லுடைக்கும் தொழிலாளி, பழங்குடியினா், ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட காய்கறி, மளிகை பொருள்களை பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலா் பாண்டியன், செஞ்சி நகரத் தலைவா் ராமு, செஞ்சி ஒன்றிய மேற்கு தலைவா் பாபு, மேல்மலையனூா் சீனுவாசன், மோகன், மாவட்ட மகளிரணி புஷ்பராணி, திருவேங்கடம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.