விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கடுமையான கோடை வெயில் தாக்கம் இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் மற்றும் சுற்றுப்பகுதியில் மழை பெய்யத் தொடங்கியது.
தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் குளிர்ச்சியான சூழலால் மகிழ்ச்சி அடைந்தனர்.