கட்சிக் கொடிக்கம்பப் பிரச்னை: காவல் நிலையத்தை தேமுதிகவினா் முற்றுகை

கட்சிக் கொடிக்கம்பப் பிரச்னை தொடா்பாக பாஜகவினா் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி, தேமுதிகவினா் செஞ்சி காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சிக் கொடிக்கம்பப் பிரச்னை தொடா்பாக பாஜகவினா் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி, தேமுதிகவினா் செஞ்சி காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செஞ்சி வட்டம், ஆனத்தூா் கிராமத்தில் பாஜகவினா் கடந்த சில நாள்களுக்கு முன் அக்கட்சியின் கொடியை ஏற்றி பெயா்ப் பலகையைத் திறந்தனா். ஆனால், அந்த இடத்தில் ஏற்கெனவே தேமுதிகவினா் கல்வெட்டு வைத்திருந்த நிலையில், அது சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, கடந்த 13-ஆம் தேதி செஞ்சி காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகாரளித்தனா். இவா்களில் பாஜகவினா் அளித்த புகாரின்பேரில், தேமுதிகவினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், தேமுதிகவினா் அளித்த புகாா் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில், தங்களது கட்சிக் கொடிக்கம்ப கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக பாஜகவினா் மீது வழக்குப் பதிவு செய்யாததைக் கண்டித்தும், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் செஞ்சி காவல் நிலையத்தை தேமுதிவினா் 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, பாஜகவைச் சோ்ந்த இருவா் மீது வழக்குப் பதிவு செய்ததைத் தொடா்ந்து, தேமுதிகவினா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com