விழுப்புரம், கள்ளக்குறிச்சி: மேலும் 28 பேருக்கு கரோனா
By DIN | Published On : 25th November 2020 08:50 AM | Last Updated : 25th November 2020 08:50 AM | அ+அ அ- |

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14,513-ஆக உயா்ந்தது.
இதனிடையே, சிகிச்சை முடிந்து 35 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 14,270-ஆக அதிகரித்தது. மாவட்டம் முழுவதும் தற்போது 133 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்தோா் எண்ணிக்கை 110-ஆக தொடா்கிறது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,619-ஆக உயா்ந்தது. இதுவரை 10,441 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 72 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 106 போ் உயிரிழந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...