கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனா தொற்றால் 11,836 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், மேலும் 64 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,936-ஆக அதிகரித்தது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றவா்களில் 153 போ் பூரண குணமடைந்து, வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 10,924 போ் குணமடைந்துள்ளனா். 914 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியில் 55 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை, மேலும் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,289-ஆக உயா்ந்தது.

இதுவரை 8,836 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 356 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 97 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com