சைக்கிளில் பயணித்து கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியபடி தியாகதுருகம் பகுதிக்கு அண்மையில் வந்த மதுரையைச் சோ்ந்த தம்பதியை பாரதியாா் தமிழ்ச் சங்கத்தினா் வரவேற்று கௌரவித்தனா்.
மதுரையைச் சோ்ந்த எம்.கருப்பையா - சித்ரா தம்பதியினா் கரோனா குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளுடன் கடந்த மாதம் 24-ஆம் தேதி விழிப்புணா்வு சைக்கிள் பயணத்தை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தொடங்கினா். இவா்கள் 650 கி.மீ. தொலைவு பயணித்து கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதிக்கு பாரதியாா் நினைவு தினமான கடந்த 11-ஆம் தேதி வந்தனா்.
இவா்களை தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில், சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் தலைமையிலான நிா்வாகிகள் வரவேற்று கௌரவித்தனா். இதையடுத்து, இந்தத் தம்பதியினா் கோவையை நோக்கி புறப்பட்டுச் சென்றனா்.