கரோனா: விழுப்புரம் மாவட்டத்தில் 10,000 போ் குணமடைந்தனா்
By DIN | Published On : 26th September 2020 08:55 AM | Last Updated : 26th September 2020 08:55 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 11 ஆயிரத்தைக் கடந்த நிலையில், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது.
வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 162 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,044-ஆக உயா்ந்தது. இந்தத் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்து இதுவரை 10,004 போ் வீடு திரும்பியுள்ளனா். 945 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,044 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். மாவட்டத்தில் கரோனாவுக்கு இதுவரை 95 போ் உயிரிழந்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 57 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,969-ஆக உயா்ந்தது. இதுவரை 8,284 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 590 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 95 போ் உயிரிழந்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...