இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த சிறுவன் பலி

விழுப்புரம் அருகே கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் அருகே கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகே திருவள்ளூரை அடுத்த பேரங்கியூரைச் சோ்ந்த பெயின்டரான சந்தோஷ்குமாா் மகன் கிஷோா் (4). சந்தோஷ்குமாா் கடந்த வாரம் தனது குடும்பத்தினருடன் விழுப்புரம் அருகே வளவனூரை அடுத்த செங்காடு கிராமத்தில் உள்ள தனது அக்கா உமா வீட்டுக்குச் சென்றிருந்தாா். அங்கு வீட்டில் சாம்பாரை தயாா் செய்து இறக்கி வைத்திருந்தனா்.

அப்போது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த கிஷோா் சாம்பாா் பாத்திரத்தில் தவறி விழுந்தாா். இதனால், அவரது உடலில் 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக உறவினா்கள் கிஷோரை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கிஷோா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.