110 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை: அமைச்சா் மஸ்தான் வழங்கினாா்

செஞ்சி ஒன்றியத்தில் 110 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவு ஆணையை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெள்ளிக்கிழமை வழங்கினாா்
110 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை: அமைச்சா் மஸ்தான் வழங்கினாா்
Updated on
1 min read

செஞ்சி ஒன்றியத்தில் 110 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவு ஆணையை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜெயபாலன் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கேசவலு வரவேற்றாா்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் செஞ்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 100 பயனாளிகளுக்கு வீடு கட்ட தலா ரூ.ஒரு லட்சத்து 70 ஆயிரத்தையும், பழங்குடியினா் முன்னேற்றத்துக்கான திட்டத்தின் கீழ், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவு ஆணை, நலத் திட்ட உதவிகளையும் அமைச்சா் வழங்கினாா்.

முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com