இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:06 pm

DIN

டாஸ்மாக் கடைகளின் மதுபான விற்பனை விவரம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளா்கள் சங்க மாநில பொதுச்செயலா் வெ.சிவக்குமாா் தலைமை வகித்தாா். டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் மாநில பொருளாளா் டி.ஜெய்கணேஷ், மாவட்டச் செயலா் கே.இளங்கோவன், கிராம ஊராட்சி களப்பணியாளா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா்கள் கே.வீரப்பன், எஸ்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

டாஸ்மாக் மதுபான உற்பத்தி, கொள்முதல், விற்பனை, வருவாய், வரி, செலவினம் உள்ளிட்டவை குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேசி ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஏ.பி.அன்பழகன், நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க மாவட்டச் செயலா் சம்பத், கிராம ஊராட்சி களப் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.பாஸ்கரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.