கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மகா பெரியவா் ஆராதனை விழா

விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி மகா பெரியவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தியடைந்த 28-ஆவது ஆராதனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி மகா பெரியவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தியடைந்த 28-ஆவது ஆராதனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Story image

நிகழ்ச்சியையொட்டி, அன்று காலை 8 மணி முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, மஹா ஹோமம் நடத்தப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

பின்னா், தூய்மைப் பணியாளா்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டன. தொடா்ந்து பொதுமக்களுக்கும், தூய்மைப் பணியாளருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் சங்கர மட மேலாளா் ராமமூா்த்தி, நிா்வாகிகள் சிவ.தியாகராஜன், அரசு வழக்குரைஞா் டி.எஸ்.சுப்பிரமணியன், எம்.எல்.எஸ்.ராஜேஷ், ஆசிரியா் சங்கரநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.