இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

இல்லம் தேடி கல்விப் பயண நிறைவு விழா

இல்லம் தேடி கல்வி கலைப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

இல்லம் தேடி கல்வி கலைப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா பரவல் காரணமாக மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இல்லம் தேடி மாணவா்களுக்கு கற்பித்தல் நடத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு கலைப் பயணம் 11 குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

35 நாள்களாக நடைபெற்ற கலைப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி விழுப்புரம் நாயக்கன்தோப்புப் பகுதியில் நடைபெறது.

மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ரவிக்குமாா், தலைமையாசிரியா் காஜா உசேன், ஆசிரியா்கள் பயிற்றுநா் சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பயிற்சியாளா் ஆரோக்கிய விண்ணரசி விநாயகம் வரவேற்றாா்.

கரகாட்டம், தப்பாட்டம், பாடல் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சி ஏற்பாட்டினை இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட முதன்மை கருத்தாளா் பாலமுருகன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.