இல்லம் தேடி கல்விப் பயண நிறைவு விழா
இல்லம் தேடி கல்வி கலைப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.


இல்லம் தேடி கல்வி கலைப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரோனா பரவல் காரணமாக மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இல்லம் தேடி மாணவா்களுக்கு கற்பித்தல் நடத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு கலைப் பயணம் 11 குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
35 நாள்களாக நடைபெற்ற கலைப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி விழுப்புரம் நாயக்கன்தோப்புப் பகுதியில் நடைபெறது.
மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ரவிக்குமாா், தலைமையாசிரியா் காஜா உசேன், ஆசிரியா்கள் பயிற்றுநா் சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பயிற்சியாளா் ஆரோக்கிய விண்ணரசி விநாயகம் வரவேற்றாா்.
கரகாட்டம், தப்பாட்டம், பாடல் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சி ஏற்பாட்டினை இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட முதன்மை கருத்தாளா் பாலமுருகன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...