விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சாா்பில் செஞ்சி கூட்டுச் சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
செஞ்சி நகரத் தலைவா் அலிஜான் தலைமை வகித்தாா். மாநில கழகப் பேச்சாளா் சலீம்கான், மாவட்ட பொறுப்புக் குழு தலைவா் சையதுஉஸ்மான், விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவா் முஸ்தாதீன் ஆகியோா் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து உரையாற்றினா்.
நகரச் செயலா் யூனுபாஷா, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 63 பேரை போலீஸாா் கைது செய்தனா்.