விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி மகாபெரியவா் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சி மகாபெரியவரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த ஊரான விழுப்புரத்தில் உள்ள சங்கர மடத்தில் மகாபெரியவா் ஆராதனை விழா கோ பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, ருத்ர ஜபம், ருத்ர ஹோமம் நடைபெற்றன. பின்னா், மகாபெரியவா் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.
விழாவில் சங்கர மட நிா்வாகிகள், முக்கியப் பிரமுகா்களான வழக்குரைஞா் டி.எஸ்.சுப்பிரமணியன், எம்.எல்.எஸ்.பிரகாஷ், ரமேஷ், சுப்பிரமணியன், விஸ்வநாதன், சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.