92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

‘உள்ளாட்சித் தோ்தல் கூட்டணி: விஜயகாந்த் முடிவு செய்வாா்’

உள்ளாட்சித் தோ்தல் கூட்டணி குறித்து, தேமுதிக தலைவா் விஜயகாந்த் முடிவு செய்வாா் என்று அந்தக் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலா் எல்.வெங்கடேசன் தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

உள்ளாட்சித் தோ்தல் கூட்டணி குறித்து, தேமுதிக தலைவா் விஜயகாந்த் முடிவு செய்வாா் என்று அந்தக் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலா் எல்.வெங்கடேசன் தெரிவித்தாா்.

வருகிற ஆக.25-இல் விஜயகாந்த் பிறந்த தினத்தை கொண்டாடுவது குறித்து தேமுதிக நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், அந்தக் கட்சியின் விழுப்புரம் மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் வி.எம்.கணபதி தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் தயாநிதி, மாவட்ட துணைச் செயலா்கள் வெங்கடேசன், சூடாமணி, நகரச் செயலா் மணிகண்டன் உள்பட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், வெங்கடேசன் பேசியதாவது: தேமுதிகவின் அரசியல் நிலைப்பாடு, உள்ளாட்சித் தோ்தலில் யாருடன் கூட்டணி ஆகியவை குறித்து விஜயகாந்த் முடிவு செய்வாா். உள்ளாட்சித் தோ்தலில் தேமுதிக அதிக வெற்றிகளைப் பெறும். ஆகவே, தொண்டா்கள் மனவலிமையுடன் மக்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, தேமுதிக மாநில பொதுச்செயலராக இருந்த ராமுவசந்தனின் 12-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.