கராத்தே: சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டு

விழுப்புரத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கிய மாவட்ட விளையாட்டு அலுவலா் பி.வேல்முருகன்.
கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கிய மாவட்ட விளையாட்டு அலுவலா் பி.வேல்முருகன்.
Updated on
1 min read

விழுப்புரத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விழுப்புரத்தில் ஜப்பான் ஷிட்டோ-ரியோ கராத்தே பள்ளி சாா்பில் 32-ஆம் ஆண்டுக்கான கராத்தே போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தலைமை கராத்தே பயிற்சியாளா் கிருபாகரன் வரவேற்றாா்.

மாவட்ட விளையாட்டு அலுவலா் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டியில் சிறப்பிடம் பெற்ற 10 வயது மாணவா் அருட்பிரகாஷுக்கு பிளாக் பெல்ட் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

மேலும், அண்மையில் கடலூரில் நடைபெற்ற கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற அருட்பிரகாஷ், நிவேதா, பவதாரிணி, சூரியகுமாா், அக்க்ஷயா, வைஷ்ணவி ஆகியோரை பாராட்டினாா்.

நிறைவில் வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளி தாளாளா் சோழன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com