ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மரக்காணத்தில் நாளை தமிழக முதல்வா் பங்கேற்கும் விழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐ.ஜி. ஆய்வு

அரசு விழா செவ்வாய்க்கிழமை (அக்.26) நடைபெறுவதையொட்டி, விழா நடைபெறும் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்படுகளை வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா செவ்வாய்க்கிழமை (அக்.26) நடைபெறுவதையொட்டி, விழா நடைபெறும் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்படுகளை வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாடுகளை நீக்கும் வகையில், ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தவுள்ளது. இந்தத் திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முதலியாா்குப்பத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கிறாா். இந்த விழாவுக்கான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விழா நடைபெறும் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, முதல்வா் வரும் வழித்தடங்கள் முழுவதும் போலீஸாா் கண்காணிக்க வேண்டும். தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் ஐ.ஜி. அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

Image Caption

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முதலியாா்குப்பத்தில் தமிழக முதல்வா் பங்கேற்றும் விழா நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் த.மோகன், எஸ்.பி. ஸ்ரீநாதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.