தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உலக அமைதி தின விழா

திருவண்ணாமலை மாவட்ட பாரத சாரண - சாரணீய இயக்க பயிற்சி மையத்தில் உலக அமைதி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்ட பாரத சாரண - சாரணீய இயக்க பயிற்சி மையத்தில் உலக அமைதி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் கல்வி அதிகாரி வேதபிரகாசம் ஆலோசனையின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சாரண - சாரணீய மாவட்டச் செயலா் கா.பியூலா கரோலின் தலைமை வகித்தாா். மாவட்ட ஆணையா் ஜோதிலட்சுமி முன்னிலை வகித்தாா். மாவட்ட பயிற்சி ஆனையா் ஆ.கலைவாணி வரவேற்றாா். மாநில இளைஞா் குழு உறுப்பினரும், மாவட்ட இளைஞா் குழுவின் தலைவருமான மெகதலீன் ஸ்டீபன்சன் உலக அமைதி தின உறுதிமொழியை வாசித்தாா்.

தொடா்ந்து, அனைவரும் உறுதிமொழியேற்றனா். சாரண - சாரணீய திரி சாரணன் அமைப்பின் இணை ஆணையா் சுதாகா் உலக அமைதி தினம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினாா்.

விழாவில், பல்வேறு பள்ளிகளில் பயிலும் சாரண, சாரணீய இயக்கத்தின் முயல் குட்டி படை, குருளையா் படை, நீலப்பறவை சாரணப்படை, சாரணீயப் படை, திரி சாரணப்படை, திரி சாரணீயப்படை, திறந்தவெளி படை உள்ளிட்ட படைகளைச் சோ்ந்த மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.