விழுப்புரத்தில் பலத்த மழை

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை திடீரென பலத்த மழை பெய்தது.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை திடீரென பலத்த மழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு காலை 10 மணி வரை மழை விட்டு விட்டு தூறியது.

விழுப்புரம் நகரம், கோலியனூா், வளவனூா், திண்டிவனம், மயிலம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோல மழை பெய்தது. நண்பகல் 12 மணிக்கு மேல் மழை நின்றுவிட்டது. இந்தத் திடீா் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com