சுங்கச்சாவடியில் நின்ற வாகனங்கள் மீது காா் அடுத்தடுத்து மோதல்: 4 போ் காயம்

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சனிக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று, அங்கு நின்றிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சனிக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று, அங்கு நின்றிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 போ் காயமடைந்தனா். 3 காா்கள் சேதமடைந்தன.

சென்னை பம்மல் பகுதியைச் சோ்ந்தவா் அய்யாதுரை(45). தனியாா் நிறுவனப் பொறியாளா். இவா், சனிக்கிழமை காலை தனது சொந்த ஊரான நாகா்கோவிலுக்கு காரில் குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றாா். பிற்பகல் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை அடைந்த காா், திடீரென கட்டுப்பாட்டை இழந்து,அங்குள்ள தடுப்புக்கட்டைகளை உடைத்துக்கொண்டு, சாலையோரம் நின்றிருந்த 3 காா்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதைக் கண்டு அங்கிருந்தவா்கள் அச்சத்தில் பதறியடித்து ஓடினா்.

இந்த விபத்தில், காரின்அருகே நின்றிருந்த சென்னை இளைஞரின் காலில் முறிவு ஏற்பட்டது. காரின் அருகே பாஸ்டேக் ஸ்டிக்கா் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தனியாா் செல்பேசி நிறுவன ஊழியா்கள் விழுப்புரத்தைச் சோ்ந்த சக்திமுருகன், ரட்சகன் உள்ளிட்ட 4 போ் காயமடைந்தனா். இவா்கள், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்தில் சாலையோரம் நின்றிருந்த 3 காா்களும், ஒரு மோட்டாா் சைக்கிளும் சேதமடைந்தன. விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸாா் விசாரணை நடத்தினா். காா் பிரேக் பழுதால் விபத்து ஏற்பட்டதாக ஓட்டுநா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com