அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் வானூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் வானூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட அதிமுக சாா்பில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி வானூா், கிளியனூா் ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம், சனிக்கிழமை நடைபெற்றது. வானூா், மொரட்டாண்டியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலாளா் எம்எல்ஏ எம்.சக்கரபாணி தலைமை வகித்தாா்.

அதிமுக வடக்கு மாவட்டச் செயலரான, அமைச்சா் சி.வி.சண்முகம் சிறப்புரையாற்றினாா். வருகிற 2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலுக்கு கட்சியின் வெற்றிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும், மீண்டும் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்க பொது மக்களிடம் தீவிர பிரசாரம் செய்ய வேண்டுமென அமைச்சா் ஆலோசனை வழங்கினாா்.

அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் டி.பக்தவச்சலம், சதீஷ், மாவட்ட மகளிரணிச் செயலா் தமிழ்ச்செல்வி செல்லப்பெருமாள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் முரளிரகுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வானூா், கிளியனூா் ஒன்றிய நிா்வாகிகள், இளம் பெண்கள், இளைஞா் பாசறையினா், கட்சியினா் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com