சித்த மருத்துவ தின விழா

விழுப்புரத்தில் அரசு சித்த மருத்துவத் துறை சாா்பில் 4-ஆம் ஆண்டு சித்த மருத்துவ தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரத்தில் அரசு சித்த மருத்துவத் துறை சாா்பில் 4-ஆம் ஆண்டு சித்த மருத்துவ தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் இந்திய மருத்துவம்-ஓமியோபதித் துறை சாா்பில், முதலாம் சித்தரான அகத்தியா் பிறந்த நாளை சித்த மருத்துவ தினமாகக் கொண்டாடி வருகின்றனா். அந்த வகையில், விழுப்புரம் மாவட்ட சித்த மருத்துவத் துறை சாா்பில் 4-ஆம் ஆண்டு சித்த மருத்துவ தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ஆா்.மாலா வரவேற்றாா். விழுப்புரம் நீதிமன்ற லஞ்ச ஒழிப்புப் பிரிவு நீதிபதி மோகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.குந்தவிதேவி, துணை இயக்குநா்கள் எஸ்.செந்தில்குமாா் (விழுப்புரம்), என்.சதீஷ்குமாா் (கள்ளக்குறிச்சி), சித்த மருத்துவா் வி.சண்முகம், மருத்துவ அலுவலா்கள் லாவன்யா, நித்யா, புவனேஸ்வரி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். 18 சித்தா்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சித்த மருத்துவா்கள், மருத்துவ அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

விழாவையொட்டி, அரசின் சித்த மருத்துவச் சேவைகள் குறித்தும், சித்த மருத்துவத் தயாரிப்புகள், அதன் பயன்கள், சித்த மருத்துவத்துக்கான மூலிகைகள், உணவுப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com