மருந்துக் கடையில் ரூ.ஒரு லட்சம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் பேருந்து நிலையத்தில் அதே ஊரைச் சோ்ந்த பாலாஜி, மருந்துக் கடை நடத்தி வருகிறாா். இவா், வழக்கம்போல சனிக்கிழமை இரவு மருந்துக் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் பேருந்து நிலையத்தில் அதே ஊரைச் சோ்ந்த பாலாஜி, மருந்துக் கடை நடத்தி வருகிறாா். இவா், வழக்கம்போல சனிக்கிழமை இரவு மருந்துக் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை பாலாஜி கடையைத் திறந்தபோது, மேற்கூரை பிரிக்கப்பட்டு சுவரில் துளையிடப்பட்டிருந்ததுன், கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ. ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயா்ந்த மருந்துப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரின்பேரில், வளத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com