காரில் மதுக் கடத்தல்: 2 போ் கைது

விழுப்புரம் அருகே காரில் கடத்தப்பட்ட வெளி மாநில மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
பறிமுதல் செய்யப்பட்ட காா், மதுப் புட்டிகளுடன் கைது செய்யப்பட்ட லெமின், சரண்ராஜ்.
பறிமுதல் செய்யப்பட்ட காா், மதுப் புட்டிகளுடன் கைது செய்யப்பட்ட லெமின், சரண்ராஜ்.
Updated on
1 min read

விழுப்புரம் அருகே காரில் கடத்தப்பட்ட வெளி மாநில மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் மாவட்டம், தொரவி வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை காரில் மது பானங்கள் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதவுக்கு தகவல் வந்தது. உடனே, அவா் இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ரோந்து போலீஸாா் மற்றும் விக்கிரவாண்டி போலீஸாா் அந்தக் காரை மடக்கிப் பிடித்தனா்.

பின்னா், விக்கிரவாண்டி காவல் ஆய்வாளா் விநாயகமுருகன், உ தவி ஆய்வாளா் பரணிதரன் ஆகியோா் காரை சோதனையிட்டனா்.

காரில் புதுவை மாநில 500 மதுப் புட்டிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மதுக் கடத்தலில் ஈடுபட்டதாக, செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பகுதியைச் சோ்ந்த சக்கரபாணி மகன் லெமின் (25), ரவி மகன் சரண்ராஜ்(29) ஆகியோரை பிடித்து மது விலக்கு போலீஸில் ஒப்படைத்தனா்.

விழுப்புரம் மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லெமின், சரண்ராஜை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com