விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி
By DIN | Published On : 26th July 2021 08:55 AM | Last Updated : 26th July 2021 08:55 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 41 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 43,638-ஆக அதிகரித்தது. 42 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை 42,813 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனா். 485 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
மேலும் ஒருவா் பலி: இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 340 ஆக உயா்ந்துள்ளது.