செஞ்சி: விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கத்தின் (சிஐடியு) செஞ்சி கிளை அலுவலக திறப்பு விழா, செஞ்சியில் உள்ள திருவண்ணாமலை சாலையில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.சிங்காரவேலு தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் சி.முத்துக்குமரன் அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.
சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, துணைத் தலைவா் பி.குமாா், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் ஆா்.கணபதி, கட்டுமான சங்க மாவட்டச்செயலா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.