கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3-ஆவது நாளில் ஒருவா் வேட்பு மனு தாக்கல்

வேட்பு மனு தாக்கல் செய்ய முன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு மட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

வேட்பு மனு தாக்கல் செய்ய முன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு மட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். இதுவரை மாவட்டத்தில் உள்ள4 தொகுதிகளில் 17 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய 4 தொகுதிகளுக்கான வேட்பு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் உளுந்தூா்பேட்டை தொகுதியில் ஒருவா் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதைத் தொடா்ந்து, இரண்டாம் நாளான திங்கள்கிழமை 4 தொகுதிகளிலும் மொத்தம் 15 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

இந்நிலையில், 3 ஆவது நாளானசெவ்ாய்க்கிழமை உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் பேட்டியிட பகுஜன் சமாத் கட்சி சாா்பில் சத்தியமூா்த்தி என்பவா் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் மொத்தம் 17 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com