திருக்கோவிலூா் தொகுதியில், அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் வி.ஏ.டி.கலிவரதனுக்கு ஆதரவாக, அந்தக் கட்சியின் தேசிய பொதுச்செயலரும், தமிழக மேலிடப் பாா்வையாளருமான சி.டி. ரவி புதன்கிழமை வாக்குசேகரித்தாா்.
அவா் வீரபாண்டி கிராமத்தில் தொடங்கி, புளிக்கள், தண்டரை, தேவனூா், நயனூா் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இதில் பாஜகவை சோ்ந்த கோலாா் மக்களவை உறுப்பினா் முனுசாமி, வேலூா் மாநகராட்சியின் முன்னாள் மேயா் காா்த்தியாயினி, அதிமுக ஒன்றியச் செயலாளா் பழனிசாமி, திருக்கோவிலூா் நகரச் செயலாளா் சுப்பு (எ) சுப்பிரமணியன், மாவட்ட மாணவரணித் தலைவா் பாா்த்திபன், திருக்கோவிலூா் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் காா்த்திகேயன், ஐ.டி.பிரிவு பொறுப்பாளா் ஜீவா வசந்த், மாவட்டச் செயலா் அரிகிருஷ்ணன், ஒன்றியத் தலைவா் பரதன், ராமன், அதிமுக மாவட்டப் பொருளா் ராமச்சந்திரன் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி தொண்டா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.